சென்னை, டிச. 9- ஆளுநர் மாளிகையில் வெடி குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த அக்டோபர் 25-ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது ஒருவர் பெட் ரோல் குண்டுகளை வீச முயன்றார். அங்கிருந்த போலீசார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவரை கைது செய்த போலீசார் விசாரித்ததில் அவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்கு கள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார், கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறை யில் அடைத்தனர்.
மேலும் ரவுடி கருக்கா வினோத் மீது என்ஐஏ நவ.14 அன்று வழக்குப் பதிவு செய்தது. இதில் கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசார ணைக்காக சம்பந்தப்பட்ட ஆவணங் களை சென்னை காவல்துறை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சில தினங்களுக்கு முன்பு ஒப்படைத்தது. இந்த நிலை யில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஆளுநர் மாளிகை நுழைவாயி லில் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் சம்ப வம் நடந்த நேரத்தில் பாதுகாப்பில் இருந்த ஆயுதப்படை காவலரை விசா ரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இந்த விசாரணையில் ரவுடி கருக்கா வினோத்தை நேரடியாக காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ முடிவு செய்துள்ளது. அதன்படி பூந்த மல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனுதாக்கல் செய்துள்ளது.