காஞ்சிபுரம்: 25 பேருக்கு தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் படப்பை, காஞ்சிபுரம், மாங்காடு, குன்றத்தூர், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 25 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி தெரிவித்தார். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 675 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 386 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 10 பேருக்கு மேல் உயிரிழந்து உள்ளனர். 279 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்: 78 பேருக்கு தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1797ஆக அதிகரித் துள்ளது. இவர்களில் 848 பேர் குணமடைந்துள்ளனர். 21 பேர் உயிரிழந்தனர். 928 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு: 136 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 136 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2705ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1150 பேர் குண
மடைந்த நிலையில், 23 பேர் இறந்தனர். 1531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திரைப்பட ஒளிப்பதிவாளர்கண்ணன் காலமானார்
தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன்(69) சென்னையில் காலமானார். பாரதிராஜாவின் வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். மறைந்த முதுபெரும் இயக்குனர் பீம்சிங்கின் மகன் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.
பொன்னேரியில் நாளை முதல் கடைகளை மூட உத்தரவு
பொன்னேரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் ஜூன் 15ந் தேதி முதல் 21ந் தேதி வரை கடைகள் அனைத்தையும் மூடும்படி பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
4 பேர் உயிரிழப்பு
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த எண்ணூர்
அண்ணாநகரைச் சேர்ந்த பெண்(38), வியாசர்பாடியைச் சேர்ந்த பெண்(58), திருவள்ளூர் மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த முதியவர்(65), ராயபுரத்தைச் சேர்ந்த முதியவரும்(68) என 4 பேர் உயிரிழந்தனர்
இளம்பெண் தற்கொலை
சென்னை கோட்டூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(33). இவரது மனைவி தீபா (28). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் வெள்ளியன்று (ஜூன் 12) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அவரது கணவர் சுரேஷ் தனது மனைவி தீபா மாயமானது குறித்து செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே புழல் ஏரியில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். அது தீபா என்பதை உறுதி செய்த
னர். இதுகுறித்து காவல்தறையினர் விசாரித்து வருகின்றனர்.
கொலை வழக்கில் 8 பேர் கைது
சென்னை கண்ணகி நகரில் விஜய் (24) என்ற நபரை கடந்த 10ஆம் தேதி, இரு சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் சரமாறியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கண்ணகி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22), பிரபாகரன் (28), வெங்கடேசன் (20), தாதா மணிகண்டன் (22), பிரபாகரன் (24), மணிமாறன் (24), பாலவாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (21), வேளச்சேரியை சேர்ந்த கோகுல் (19) ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.