திருவள்ளூரில் மதுவாங்க சென்ற 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சென்னையிலிருந்து மதுவாங்குவதற்காக திருவள்ளூர் சென்ற 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோழவரம், எண்ணூர், கொண்டக்கரை மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 779ஆக உயர்ந்துள்ளது. 253 பேர் குணமடைந்துள்ளள், 7 பேர் உயிரிழந்த நிலையில், 518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று
காஞ்சிபுரம் - மாவட்டத்தில் மேலும் 21 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது மாவட்ட அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. 155 பேர் குணமடைந்து, ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது 129 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருவள்ளூரில் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 731 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 270 பேர் குணமடைந்துள்ளனர். 9 பேர் இறந்துள்ளனர். 452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பனையூர் குப்பத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்
செங்கல்பட்டு மாவட்டம், பனையூர் குப்பத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம் அடைந்துள்ளார். ஞாயிறன்று (மே 24) அதிகாலை பாளையம் என்பவருக்கு சொந்தமான படகில் 4 பேர் கடலுக்கு சென்றனர். சற்று நேரத்தில் கடல் சீற்றத்தால் எழுந்த அலையில் சிக்கி படகு கவிழ்ந்துள்ளது. இதில, 4 பேரில் மூவர் தப்பித்து கரை திரும்பிய நிலையில், பாளையம் என்பவர் மட்டும் கரை திரும்பவில்லை.
தண்டையார் பேட்டையிலும் பாதிப்பு 1000ஆக உயர்கிறது?
தமிழகத்தில் கொரோனா தொற்றல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக உள்ளது. இது இந்திய அளவில் அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராஜஸ்தானை விட சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்படுவோரில் 3ல் 2 பங்கினர் சென்னையில் மட்டுமே உள்ளனர்.
சென்னையில் பாதிக்கப்பட்டோரில் 4 ஆயிரத்து 844 பேர் குணமடைந்துள்ளனர். 78 பேர் இறந்துள்ளனர். 5 ஆயிரத்து 653 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் (மே 23 தகவல்படி) ஆயிரத்து 889 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 391, திரு.வி.க.நகர் மண்டலத்தில் ஆயிரத்து 133 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 54 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தண்டையாளர்பேட்டை மண்டலத்திலும் அதிகளவு தொற்று பாதிப்பு உள்ளது. தற்சமயம் அங்கு 974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக எம்எல்ஏ-க்கள் மீது வழக்குப்பதிவு
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைதை கண்டித்து எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பு வளாகத்துக்கு முன் சனிக்கிழமையன்று (மே 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜா, ரங்கநாதன் உட்பட 96 நபர்கள் மீது சென்னை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.