சென்னை,பிப்.2- சென்னையிலிருந்து வெளி மாநி லங்களுக்குச் செல்லும் ரயில்களை இயக்க வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சென்னையிலிருந்து வெளி மாநி லங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படு கின்றன.
தற்போது சென்னையில் லிருந்து அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்துக்கு ரயில்கள் வந்து செல்வதில் கூடுதல் நேரமாகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய ரயில்களை இயக்கும் வகையில் வில்லிவாக்கத் தில் புதிய ரயில் முனையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தண்டையார் பேட்டை அல்லது சால்ட் கொட்டாய் பகுதிகளில் அமைவதாக இருந்தது. சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ஏற்படும் நெரி சலைக் குறைக்க, நான்காவது முனை யம் உருவாக்கப்பட வேண்டும் என்ற திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கி யது. ஆனால், போதுமான நிலம் கிடைக் காததால், வெளி மாநிலங்களுக்கு ரயில்களை இயக்குவதில் ஏற்பட்ட நடை முறை சிக்கல்களும் இந்த திட்டம் கிடப்பில் இருந்தது. முதலில், ராயபுரத்தை புதிய முனையமாக மாற்ற திட்டமிடப்பட்டு, போதுமான நிலம் இல்லாமல், ஸ்டான்லி மருத்துவமனைக்கு சொந்த மான நிலத்தை ரயில்வேக்கு பெயர் மாற்றம் செய்வதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்களால் 2017ஆம் ஆண்டு அந்த திட்டம் கைவிடப்பட்டது. பிறகு, தண்டையார்பேட்டையில் புதிய முனையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வுக்குட் படுத்தப்பட்டன. அதேவேளையில், சால்ட் கொட்டாயில் இருந்த காலி நிலம் கவனத்தில் கொள்ளப்பட்டது. ஆனால், இயக்குவதில் ஏற்பட்ட சிக்கல் களால் அதுவும் கைவிடப்பட்டது.
ஆனால், இதுவரை ஒருங்கி ணைந்த சாத்தியக்கூறு அறிக்கை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக் கப்பட வில்லை. ஆனால், நான்காவ தாக புதிய முனையத்தை வில்லிவாக் கத்தில் அமைப்பதற்கான விதிமுறை கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர். தொடர்ந்து பேசிய அவர், அதற் கான திட்ட மதிப்பீடு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் புதிய முனையம் அமைக்கப்படும். சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
. சென்னை - மைசூரு இடையே அதிவேக ரயில்களை இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இயக்கப்படும் மின்சார ரயில் களுக்கு மாற்றாக ‘வந்தே மெட்ரோ’ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை கடற்கரை - எழும்பூர் 4-ஆவது வழித்தடம் அமைக் கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்கப் படும்.
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு ரூ. 20 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் தண்டவாளம், நடைமேடை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. புதிய ரயில் நிலையம் அமைக்க தண்ட வாளம் மாற்றி அமைக்க வேண்டி யுள்ளது. விரைவில் இதற்கான பணி கள் தொடங்கப்பட்டு 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.