tamilnadu

img

புதிதாக பெட்ரோல் பங்குகள்: மத்திய அரசு பதில் மனு

சென்னை:
தமிழகத்தில் புதிதாக பெட்ரோல் பங்குகள் அமைப்பதற்கான அறிவிப்பாணைக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கில் அது கொள்கை ரீதியான முடிவு என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய் துள்ளது.இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை முன்பு விசாரித்த நீதிமன்றம் தமிழக ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரத்து 125 பெட்ரோல் பங்குகளை அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.இந்நிலையில் நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பெட்ரோலிய நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முன்பை விட தற்போது வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில், அதிக பெட்ரோல் பங்குகள் தேவைப்படுகிறது, இது அரசின் கொள்கை ரீதியான முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் விதிகளை பின்பற்றி தான் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படுகிறது எனவும் பதில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து  வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.