புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், மாவட்டத் தலைவர் ரிச்சர்ட்பிரபு, செயலாளர் கே.வி.ஸ்ரீபரத் உள்ளிட்டு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கடலூர் கே.என்.சி மகளிர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.