tamilnadu

img

கடும் கெடுபிடிகளுக்கு இடையே நீட் தேர்வு

சென்னை,மே 7- நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பு கள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமி யோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.  மேலும் ராணுவ நர்சிங் கல்லூரி களில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வரு கிறது. 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் ஞாயி றன்று நடைபெற்றது. நீட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 20 லட்சத்து 87 ஆயி ரத்து 445 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப் பித்தனர்.  நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9  லட்சத்து 2 ஆயிரத்து 930 மாண வர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445  பேர் நீட் தேர்வை எழுதினர். தமிழ கத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் ஆவர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி உள்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடை பெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி னார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டி ருந்தன. 

தேர்வு எழுத வந்த மாணவர்கள் காலை 11.30 மணியில் இருந்தே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக் கப்பட்டனர். 1.30 மணி வரை மட்டுமே அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனு மதிக்கப்பட்டனர். தேர்வுக்கூட அனுமதி சீட்டு மற்றும் அரசால் அங்கீகரிக் கப்பட்ட அடையாள அட்டையை சரி பார்த்து மாணவர்கள் உள்ளே அனுப் பப்பட்டனர். தேர்வு எழுதியவர்கள் வெளிப்படையான தண்ணீர் பாட்டில்  கொண்டு செல்ல அனுமதி வழங்கப் பட்டது. தேர்வு அறையில் செல் போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாத னங்கள் கொண்டு செல்ல அனுமதிக் கப்படவில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டது. தலைமுடியில் ஜடை பின்னல் போட அனுமதிக்கப்பட வில்லை.   மேலும் அனுமதிச்சீட்டில் கேட்கப் பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப் படாது. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் தேர்வின் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவ-மாணவி களுக்கு அறிவுறுத்தப்பட்டது.