சென்னை, ஏப். 8 - வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற் காக கொண்டு சென்ற ரூ.4 கோடி பணம் கட்டுக்கட்டாக சிக்கிய விவகாரத்தில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டுள்ளார் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்; இதுதொடர் பாக அதிமுக எடப்பாடி பழனிசாமி வாய்திறக் காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரம்பலூரில் திங்களன்று பிரச்சாரத் திற்கு வருகை தந்த கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக உள்ள ரூ.4 கோடி பணம் ரயில் மூலமாக கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், அது பாஜகவின் வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று பணத்தை எடுத்துச் சென்றவர்கள் பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அந்த பணத்தை எடுத்துச் சென்ற மூன்று பேரில், ஒருவர் நயி னார் நாகேந்திரனின் உறவினர் என்றும், இது மட்டுமின்றி அந்த மூவரும் அவரது நிறு வனத்தில் பணிபுரிபவர்கள் என்றும் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்ற தோல்வி பயத்தில், வாக்காளர்களிடம் பணபலத்தைக் காட்டி வெற்றி பெறலாம் என்றும், குறைந்த பட்சம் டெபாசிட் தொகையையாவது தக்க வைக்கலாம் என்ற நோக்கத்திலும் இந்த நடைமுறை யை பாஜகவினர் கையாண்டு இருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஊழ லை ஒழிப்பதுதான் எங்களது நோக்கம் என்று கூறி வருகிறார்கள். உண்மையிலேயே ஊழ லை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை அவர் களுக்கு இருந்திருந்தால், இந்த நான்கு கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது, இது யாருக்காக அனுப்பப்படுகிறது என்ற விவரத்தை, கண்ட றிந்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய் தால், அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள லாம். இதுகுறித்து பாஜக தலைவர்கள் யாருமே வாய் திறக்காத நிலையில், அவர்கள்தான் இதற்கு பின்னால் இருக்கிற ஊழல் பேர்வழி கள் என்பது தெரிய வருகிறது.
நான்கு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என்று சொல்கிறார் நயினார் நாகேந்திரன். கையும் களவுமாக மாட்டிக் கொண்ட அனைவரும் சொல்லக்கூடிய பதில்தான் இது. அந்த மூன்று பேரையும் தனித்தனியாக போலீசார் விசா ரிக்கும்போது கூட அவர்கள் மூவரும் ஒரே பதிலை தந்திருக்கிறார்கள். ரயிலில் பயணிப்ப தற்கு நயினார் நாகேந்திரனின் லெட்டர்பேடு தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத் தது, அந்த மூவரில் ஒருவர் அவருடைய உற வினர். இப்படி இருக்கும்போது முழு பூசணிக் காயை அவர் சோற்றில் மறைக்க முயற்சிக் கிறார்’. இந்தப் பிரச்ச னை குறித்து இதுவரை யிலும் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்க வில்லை. இதுவே, பாஜக - அதிமுக கள்ளக் கூட்டணியை வெட்டவெளிச்சமாக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மூத்த தலைவர் என்.செல்லதுரை உடனிருந்தனர்.