tamilnadu

நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, ஆக. 20 - திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கனேரி தனி ஊராட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்துமதி, பதவி ஏற்க முடியாத நிலை தொடர்கிறது.  இப்பிரச்சனை தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்த வழக்கில், தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இவ்வழக்கு செவ்வாயன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வந்த  நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.  பிரசாத், காரல் மார்க்ஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமனும், தேர்தல் ஆணைய வழக்கறிஞர், எதிர்த் தரப்பு சார்பில் வழக்கறிஞர் செல்வ ராஜூம் ஆஜராகி வாதாடினர். “மூன்றரை ஆண்டு காலம் வழக்கு தாமதமாகி இருப்பதால் தீர்ப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்று என்.ஜி.ஆர். பிரசாத் அழுத்தமான வாதங்களை முன்வைத்தார்.

 “பஞ்சாயத்தில் பட்டியல் சாதி மக்கள் தொகை குறைவாக இருப்பதை மீண்டும் குறிப்பிட்டு இட ஒதுக்கீடு செல்லாது” என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

 “இடஒதுக்கீடு வரையறுக்கப் பட்ட நெறிகளுக்கு உட்பட்டே இருப்பதாக குறிப்பிட்டு, தொகுதி வரையறையை கேள்விக்கு ஆளாக்க முடியாது” என்று கூறி, அதுதொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு முன்னுதாரணங்களை தமி ழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் முன்வைத்தார்.  தேர்தல் ஆணைய வழக்கறிஞ ரும் தேர்தல் நடைமுறைகள் சரி யாக கடைபிடிக்கப்பட்டு உள்ள தாகவே குறிப்பிட்டார். இந்த வாதங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்புக் காக வழக்கு ஒத்திவைக்கப்படு வதாக நீதிபதி இளந்திரையன் அறி வித்துள்ளார்.