மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் செவ்வாயன்று (ஆக.20) அனுசரிக்கப்பட்டது. இதில் அறிவியல் இயக்க கவுரவத்தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட இணைச் செயலாளர் டி.சித்தார்தன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் அ.அரவிந்த், மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ.மலைச்செல்வி, உபத்தலைவர் விஞ்ஞானி ஆதவன், அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேன்மொழிச்செல்வி உட்பட பலர் பேசினர்.