திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பஜாரில் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார். மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், தமுஎகச மாநில துணைத் தலைவர் சுந்தரவள்ளி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.