சென்னை,டிச.3 சென்னை சூளை மேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனை யின் காது, மூக்கு, தொண்டை தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிலையத்தின் சார்பில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதிகளில், இரு நாட்கள் தேசிய ஸ்பீக்கர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காது மூக்கு தொண்டை, தலை கழுத்து அறுவை சிகிச்சைப் பிரி வின் தலைவரும், மூத்த ஆலோசகருமான, பேரா சிரியர் டாக்டர் சஞ்சீவ் மொஹந்தி இதனை தொடங்கி வைத்து இந்த மருத்துவப்பிரிவில் அண்மை க்கால முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார். ‘ஒலி சீர், தூக்கத்தில் மூச்சு நிற்றல், காற்றுக் குழாய் அறுவை சிகிச்சைத் துறை, ‘தலை, கழுத்து புற்று நோய் அறுவை சிகிச்சைத் துறை’, ‘மண்டை ஓடுஅறுவை சிகிச்சைத் துறை, ‘தைராயிடு கோளாறுதுறை’ ஆகியவை காது மூக்கு கழுத்து, கழுத்து அறுவை சிகிச்சை நிலையத்தின் கீழ் தொடங்கப்பட்டன. இருநாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர்கள், புற்றுநோய் நிபுணர்கள், சென்னை புதுச்சேரியிலுள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்க ளும் திரளாக பங்கேற்றுச் சிறப்பித்தனர். குரலொலி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நூபூர்கபூர் நெருர்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘ஒலி சீர், தூக்கத்தில் மூச்சு நிற்றல், காற்றுக்குழாய் அறுவை சிகிச்சைத் துறை யைத் தொடங்கி வைத்தார். பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ், பேராசிரியர் டாக்டர் பிரத மேஷ்பாய் உள்ளிட்டோர் மற்ற பிரிவுகளை தொடங்கி வைத்தனர்.