சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்ட தலைவரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான தோழர் எல்.பி.சாமி அவர்கள் திங்களன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந் தோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ் வஞ்சலியையும் செலுத்துகிறது.
தோழர் எல்.பி. சாமி, ஆசிரியர்அரங்கத்தை கட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர். அறிவொளி இயக்கத்தின் களப்பணியாளராகவும் பணியாற்றி யவர். சிறந்த எழுத்தாளர், விமர்சகர்,மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இடதுசாரி கொள்கையில் ஆழ்ந்த பிடிப்புக் கொண்ட அவர் இளைஞர்கள், மாணவர்களை இடதுசாரி அமைப்பின் கீழ் அணி திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தவர். இவரது மனைவி தோழர் எல்.பி. வசந்திஉழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனராக வும், ஜனநாயக மாதர் சங்கத்தின்முன்னணி தலைவராக பணியாற்றுகிறார். இவரது மகன் தோழர் பா.சரவணத் தமிழன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தோழர் எல்.பி.சாமி அவர்களின்மறைவு இடதுசாரி இயக்கத்திற் கும், தமுஎகசவிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.தோழர் எல்.பி. சாமி மறைவால்துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி தோழர் எல்.பி. வசந்தி, மகன் தோழர் பா.சரவணத் தமிழன் மற்றும் குடும்பத்தார்களுக்கும் , நாகை மாவட்டத் தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.