tamilnadu

img

சிபிஎம் மண்ணச்சநல்லூர் மூத்த தோழர் எஸ்.அருணாச்சலம் காலமானார்....

திருச்சிராப்பள்ளி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், திருச்சி புறநகர் மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்டத் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீக்கதிர் பத்திரிகையின் மண்ணச்சநல்லூர் முகவராக செயல்பட்ட தோழர் எஸ்.அருணாச்சலம் வயது முதிர்வின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஏப்.24 அன்று இயற்கை எய்தினார். கொரோனா காலம் என்பதால், திருச்சி ஓயாமாரி இடுகாட்டில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.  

இறப்பு செய்தி அறிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், கே.சிவராஜ், ஜே.சுப்பிரமணியம், கட்சியின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் எஸ்.பன்னீர்செல்வம், அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் நிர்வாகிகள், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.முருகேசன், பூனாம்பாளையம் கட்சி கிளைச் செயலாளர் செல்லப்பெருமாள் மற்றும் ஆனைமுத்து உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

;