districts

கூட்டு பாலியல் வன்புணர்வு மனித மிருகங்களை கைது செய்க: சிபிஎம்

விழுப்புரம்,பிப்.26- விக்கிரவாண்டி அருகே நடந்த பாலியல் வன்புணர்வு கயவர்களை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டம், கப்பியாம்புலியூர் ஏரி வாய்க்கால் அருகே மூன்று கய வர்கள் கூட்டு பாலியல் வன்பு ணர்வு செய்த நிகழ்வு மிகவும் கண்டிக்கத் தக்கதாககும். இந்த சம்ப வத்தில் பாதிக்கப்பட்ட மாண வன், மாணவி இருவரும் முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.  இருவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில்  பணிரெண்டாம் வகுப்பில் படித்து வருகிறார்கள். இதில் மாணவிக்கு தாய்-தந்தை இருவரும் கிடையாது. எனவே, பாட்டியின் வீட்டில் தங்கி படித்து வந்தார். அந்த மாணவனும், மாணவியும் அய்யங்கார் கோவில்பட்டு கிராமம் கப்பியாம்புலியூர் ஏரி கால்வாய் அருகே அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம். இதை நோட்டமிட்ட கயவர்கள் மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி யுள்ளனர். மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கியுள்ள னர். மேலும் அந்த மனித மிருகங்கள், மாணவி அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்று விட்டனர். இது ஒரு கூட்டு பாலியல் வன்பு ணர்வாகும். ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அப்படி யில்லை என்பதைப் போல் அறிக்கை விடுகிறார். இது சரியான நடவடிக்கையில்லை. இந்த சம்ப வத்தில் ஈடுபட்டிருக்கும் கயவர்களை அனைவரையும் கைது செய்து வேண்டும். மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் தெரி வித்திருக்கிறார்.

;