tamilnadu

img

என்.சங்கரய்யா நூற்றாண்டு தீக்கதிர் சிறப்பிதழ்...... சிபிஎம் மாநிலச் செயற்குழு பாராட்டு....

சென்னை:
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டையொட்டி தீக்கதிர் நாளிதழ் ஜூலை 15 அன்று சிறப்பிதழ் வெளியிட்டது. மொத்தம்324 பக்கங்கள் கொண்ட இச்சிறப்பிதழ் தமிழகம் முழுவதும் கட்சி அணிகளையும் அரசியல்இயக்கங்களையும் முற்போக்கு அமைப்பு களையும் பெரும் உற்சாகம் அடையச் செய்தது. இந்நிலையில் சங்கரய்யா நூற்றாண்டு சிறப்பிதழை வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டி, தீக்கதிர் சிறப்பிதழ் வெளிக்கொண்டு வருவது என்று கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்தது. மாநிலக்குழுவின் முடிவிற்கேற்ப “சங்கரய்யா நூற்றாண்டு தீக்கதிர் சிறப்பிதழ்” நூற்றாண்டு துவக்க தினமான ஜூலை 15அன்றும் தொடர்ந்தும் வண்ண பக்கங்களுடன் நேர்த்தியாக மிகச் சிறப்பாக வெளி வந்துள்ளது.அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு பிரமுகர்களிடம் இருந்து  கட்டுரைகள், கவிதைகள்,வாழ்த்துச் செய்திகள், ஓவியங்கள், விளம்பரங்கள் மிக குறுகிய காலத்தில் பெற்று,நேர்த்தியான முறையில் அச்சடிக்கப்பட்டு, சிறப்பிதழ் பாராட்டத்தக்க அளவில் வெளிவந்துள்ளது. இந்த சிறப்பிதழ் கட்சி உறுப்பினர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் மத்தியிலும்  வரவேற்பை பெற்றுள்ளது. 

இப்பணியில் இரவு - பகல் பாராமல் மிகச் சிறப்பாக பணியாற்றிய தீக்கதிர் நான்கு பதிப்புகளின் ஆசிரியர் குழு - நிர்வாகக் குழு, நிருபர்கள், முகவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டு இப்பணியில் ஈடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் கட்சியின் மாநிலச் செயற்குழுசார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை யும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தோழர் என். சங்கரய்யா நூற்றாண்டு சிறப்பிதழுக்கு விளம்பரங்கள் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் கட்சி அணிகள் முழுவீச்சில் உற்சாகமாக செயல்பட்டுள்ளனர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அனைவரையும் சந்தித்து தாராளமாக விளம்பரம் பெற்றுள்ளனர். குறுகிய கால அவகாசத்தில்  பல்வேறு பணிகளுக்கிடையில் கட்சியின் மாவட்டக்குழு தோழர்கள், நிருபர்கள்  சிரத்தையெடுத்து இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் சீரிய முறையில் பணி யாற்றிய அனைவருக்கும் மாநிலச் செயற்குழு தனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

80 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் இந்திய நாட்டு விடுதலைக்காக பல தியாகங்களைச் செய்து,  தன் வாழ்நாள் முழுவதையும் உழைப்பாளி மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அரும்பணியாற்றிய தோழர் என். சங்கரய்யா அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தீக்கதிர் சிறப்பிதழுக்கு தாராளமாக விளம்பரம் வழங்கிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிக்குழுக்கள்,  நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உற்றுநோக்க வைத்த கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சங்கரய்யா நூற்றாண்டு தீக்கதிர் சிறப்பு மலரின் முகப்பு பக்கத்தை அலங்கரித்த ஓவியத்தை வரைந்தவர் : இளம் ஓவியர் கோ.ராமமூர்த்தி, திருப்பூர்.

;