கள்ளக்குறிச்சி, நவ.10- கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மற்றும் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதன் காரண மாக பெண் உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் வடக்கு காட்டுக் கொட்டகை யைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (63). இவர் தனது மகன் செந்தில்குமார் (29) என்பவரோடு ஞாயி றன்று (நவ. 10) இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வந்து கொண்டி ருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி பயிற்சி உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர்கள் ஹெல்மெட் தொடர்பான வாகன சோதனை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது செந்தில்குமார் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தச் சொல்லி காவல்துறையினர் சைகை செய்ததாகவும், அவர் ஹெல்மெட் இல்லாத தால் காவல்துறையினரை பார்த்து பயந்து தொடர்ந்து வாகனத்தை ஓட்ட முயற்சித்ததாகக் கூறப்படு கிறது. இதனால் ஆத்திர மடைந்த காவலர்கள் அவர்களை தாக்கியதில் உட்கார்ந்திருந்த அய்யம்மாள் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். போலீசார் தாக்கியதால் தான் அய்யம்மாள் இறந்து விட்டதாகக் கூறி கச்சிரா பாளையம் செல்லும் சாலை யில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த அய்யம்மாள் குடும்பத்தினர் கள்ளக்குறி ச்சி காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.