வால்பாறை, பொள்ளாச்சி: மழைக்கு 3 பேர் பலி; அரசு நிவாரணம்
சென்னை, ஜூலை 30- கோவை மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையாறு அணை, இடதுகரை பகு தியில் வழுக்குப் பாறை சோதனைச் சாவடியில் இருந்து பன்னிமேடு செல் லும் பொதுப்பணித் துறை சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (57) மற்றும் தனப்பிரியா (15) ஆகிய இருவரும் உயி ரிழந்தனர். மேலும் பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் மேற்குப் பக்கச் சுவர் இடிந்து விழுந்ததில் ஹரி ஹரசுதன் (21) என்பவர் உயிரிழந்தார். இவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து வழங்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார்.
அமலாக்கத்துறை திடீர் நடவடிக்கை:
சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை!
அமலாக்கத்துறை திடீர் நடவடிக்கை: சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை!
இதனிடையே, கழிவுகளை பயன் படுத்தி மின்சாரம் தயாரிப்பதாக கூறி சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரி டம் இருந்து ரூ. 16 கோடி வாங்கி விட்டு ஏமாற்றி விட்டதாக ரவீந்தர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து கைது செய்த னர். இந்நிலையில், இவரது வீட்டில் அம லாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க் கிழமை (ஜூலை 30) சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல, நடிகர் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் என்கிற படத்தை தயாரித்த பாலாஜி கபாவின் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோத னை மேற்கொண்டனர்.
முத்தமிழ் முருகன் மாநாடு இலச்சினை வெளியீடு!
சென்னை, ஜூலை 30- அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வெளியிட்டார்.
அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், வெளி நாடுகளிலிருந்து துணை அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இம் மாநாட்டை யொட்டி பழனிக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதற்கு முதலமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார் என்றும் அமைச்சர் தெரி வித்தார். மேலும், மாநாட்டிற்காக திண்டு க்கல், பழனி ஆகிய இடங்களில் தங்கும் அறைகள், 3 இடங்களில் உணவருந்தும் கூடங்கள், 10 இடங்களில் உணவு வழ ங்க ஏற்பாடுகள் என சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி நிலையம்! அமைச்சர் தகவல்
சென்னை, ஜூலை 30- தமிழக மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சேலம் மாவட்டம், தலைவாச லில் அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1866.28 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ.564.44 கோடி திட்ட முதலீட்டில் அமைக்க 2019-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று, 2023 ஆம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், மக்களவைத் தேர்தல் ஆகியவை காரணமாக ஜனவரி 2024 இல் முடிக்கப்பட வேண்டிய பணிகள் சிறிது தாமதமாக முடிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.