tamilnadu

மாநகர பேருந்துகள் திருச்சி வரை  இயக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, மார்ச் 23-  சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கப்படும் என்று  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரி வித்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு குறைந்த  அளவிலான பேருந்துகளை இயக்கி வருகிறது. தனியார் பேருந்து கள் மார்ச் 31 வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் இன்று (மார்ச் 24) மாலை முதல் மாவட்ட எல்லைகளை மூட தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள வெளி மாவட்டத்தவர் பேருந்துகளுக்காக கோயம்பேட்டில் குவிந்துள்ள னர். இந்நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக அரசு 144 தடை  உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் செவ்வாயன்று (மார்ச் 24) மாலை  வரை பேருந்துகள் இயங்கும். மக்கள் கூட்டம் கூடாமல் பேருந்துகளை  பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்துகளை ஒரு நாள்  தமிழகத்திற்குள் மட்டும் இயக்க கோரியுள்ளோம். சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கையை எடுக்கவில்லை. திண்டிவனம், விழுப்புரம், திருச்சி நகரங்களில் இருந்து சென்னைக்கு பேருந்துகளை கொண்டு வர  அறிவுறுத்தியுள்ளோம். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான  100க்கும் மேற்பட்ட பேருந்துகளை கொண்டு திண்டிவனம், விழுப்புரம் வழியாக திருச்சி வரை இயக்கி  மக்களை அனுப்பி வைக்கிறோம். கோயம்பேட்டில் குவிந்துள்ள வர்களை மார்ச்.24 மாலைக்குள் அனுப்பிவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.