சென்னை:
அருந்ததி ராய் எழுதிய நூலை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார்பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தி லிருந்து நீக்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்றநூலை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அருந்ததிராய் உலக அளவில்புகழ்பெற்ற எழுத்தாளர். அவருடைய நூல் 2017 ஆம் ஆண்டிலிருந்து நெல்லை மனோன்மணீய முதுகலை ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு பாடமாக இருந்துவந்தது. பாஜகஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி இதற்கு ஆட்சேபம் தெரிவித்தவுடன், உடனடியாக இந்தப்புத்தகத்தை நீக்குவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார். அந்தபாடம் குறித்து ஆசிரியர்களோ, மாணவர்களோ எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காத நிலையில், ஏபிவிபி எதிர்த்தது என்பதற்காக, நீக்குவது எந்த வகையில் நியாயம்.
ஏபிவிபி சொல்வதைத்தான் பாடமாக வைக்க வேண்டும் என்றால்,பல்கலைக்கழகங்களில் பகவத் கீதை யையும், பஜ கோவிந்தத்தையும்தான் பாடமாக வைக்க வேண்டியிருக்கும்.பழங்குடி மக்களோடு தங்கி அவர்களது போராட்டம் குறித்து எழுதியுள்ள இந்த நூலை மாணவர்கள் படிப்பதுஎன்ன தவறு. இடதுசாரிக் கருத்துக் களை மாணவர்கள் படிக்கக் கூடாதா? அனைத்து வகையான சிந்தனை களையும் படிக்கும் உரிமை மாணவர் களுக்கு உண்டு. இந்தப் போக்கை அனுமதித்தால், மார்க்சினுடைய சிந்தனையையோ, பெரியார்-அம்பேத்கருடைய கருத்துக்களையோ, அண்ணா வினுடைய நூல்களையோ பாடமாக வைக்கக் கூடாது என்று கூட மிரட்டுவார்கள். ஒரு பல்கலைக்கழகத்தில் என்னபாடத்திட்டமாக இருக்க வேண்டு மென்பதை அதற்கான குழுக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஏபிவிபி போன்ற அமைப்புகள் தீர்மானிப்பதை ஏற்க முடியாது. எனவே, அருந்ததிராய் எழுதிய நூலை மீண்டும் பாடமாக வைக்க வேண்டும். கல்வி நிலையங்களில் இத்தகைய மிரட்டல்களை அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
அறிவிப்பை ரத்து செய்க!
இதுகுறித்து கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்விடுத்துள்ள அறிக்கை வருமாறு:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாட திட்டத்தில் மூன்றாண்டுகளாக இருந்துவந்த எழுத்தாளர் அருந்ததிராயின் Walking with the comrades என்றபுத்தகம் பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான அறிவிப்புகண்டனத்திற்குரியது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு பாடதிட்டத்தை அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்து மாற்றுவது ஒரு மெத்தப் படித்த துணைவேந்தருக்கு அழகல்ல. பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றால் அது குறித்து சம்பந்தப்பட்ட பாடக்குழுவில் (Board of studies) விவாதித்து முடிவெடுத்து, அம்முடிவு கல்வி நிலைக்குழுவில் (Standing committee on academic affairs) உறுதி செய்யப்பட்டு, பின்னர் ஆட்சிக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதுவே பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்ட நடைமுறை. ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர் இவ்விதிகளை மீறி ஏபிவிபி எனும் மதவாத மாணவர் அமைப்பிற்கு அடிபணிந்து பாடதிட்டக்குழு, கல்விக்குழு, ஆட்சிக்குழு என்று எந்த சட்டப்பூர்வ அமைப்பிலும் விவாதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி உரிமையை அரசியல் அதிகாரத்திற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அடகு வைத்திருப்பது கவலை அளிக்கிறது. எனவே துணைவேந்தர் தனது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கண்டனம்
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான ஆர்கனைசர், ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி ஆகியவற்றின் எதிர்ப்பின் காரணமாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு ஆங்கிலம் மேற்படிப்பில் 2017 முதல் நான்கு ஆண்டுகளாக பாடமாக இருந்தஎழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேட்ஸ் என்ற புத்தகத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தான்தோன்றித்தனமாக நீக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.அரசியல் உள்நோக்கத்துடனான அழுத்தத்திற்கு நிர்வாகம் அடிபணிந்து பாடத்தை நீக்கியுள்ளது. தமிழக அரசின் உயர்கல்வித்துறை இத்தகைய ஜனநாயக விரோத அரசியல் உள்நோக்கங் களுக்கு அடிபணியாமல் சுயசார்புடன் செயல்படவேண்டும்.பல்கலைக்கழக துணைவேந்தர் பல்கலைக்கழக விதிகளை மீறி ஏபிவிபிமதவாத மாணவர் அமைப்பிற்கு துணைபோகும் விதமாக பாடத்திட்டக்குழு, கல்விக்குழு, ஆட்சிக்குழு என்று எந்தசட்டபூர்வ அமைப்பிலும் விவாதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிகிறது.பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி உரிமையை அரசியல் அதிகாரத்திற்கு, மதவெறி கூட்டத்திற்கு பல்கலைக் கழகத் துணைவேந்தர் பலி கொடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே துணைவேந்தர் தனது அறிவிப்பை உடனே ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.