tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 2141 பேருக்கு கொரோனா... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் உச்சத்தில் உள்ளது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரதத்தில் 49 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 28 ஆயிரத்து 641 பேர் கொரோனாவிலிருந்து  மீண்டுள்ளனர்.  

அதிகபட்சமாக சென்னையில் 1,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 37 ஆயிரத்து 70 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 40 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 501 ஆக உயர்ந்துள்ளது.    

;