tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 1800-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1843 பேர் புதிய நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 46 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தில் ஒரே நாளில் 44 பேர் பலியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் செய்தியாக கடந்த  24 மணிநேரதத்தில் மட்டும் 797 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344 ஆக  அதிகரித்துள்ளது. இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அங்கு இன்று ஒரே நாளில் சென்னையில் 35 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது.  

;