tamilnadu

img

மொரப்பூர் ரயில் திட்டம் விரையில் செயல்படுத்தப்படும்

மொரப்பூர் ரயில் திட்டம் விரையில் செயல்படுத்தப்படும்

ஆட்சியர் தகவல்

தருமபுரி, மே 11- மொரப்பூர் – தருமபுரி ரயில் திட்டம் விரையில் செயல்படுத்தப்படும், என  மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள் ளார். மொரப்பூர் - தருமபுரி புதிய அகல  ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, நில எடுப்பு செய்யப்படுவதற்கான பணி கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் கள ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் அவர் கூறுகையில், மொரப்பூர் -  தருமபுரி புதிய அகல ரயில் பாதை  திட்டத்தின் கீழ், அரசாணை 54 போக்கு வரத்து (ஐ1) துறை நாள்: 17.04.2023 இன்படி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற் றும் தருமபுரி ஆகிய மூன்று வட்டங்க ளுக்குட்பட்ட 18 கிராமங்களில் பட்டா  நிலங்கள் 78.54.56 ஹெக்டேர் (194  ஏக்கர்), அரசு புறம்போக்கு நிலங்கள்  13.43.56 ஹெக்டேர் (33 ஏக்கர்) நில  மாற்றம் செய்ய அரசின் நிர்வாக  அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள் ளது. மொத்த பட்டா நிலங்கள் 78.54.56 ஹெக்டேர் (194 ஏக்கர்) நிலங்களில் 54.14.54 (134 ஏக்கர்) ஹெக்டேர் நிலங்க ளுக்கு தமிழ்நாடு தொழிலியல் நோக் கங்களுக்கான நிலஎடுப்பு சட்டம் 1997 இன்படி, நிலஎடுப்பு சட்டப்பிரிவு 3(2) இன் கீழான அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. தொடர்ந்து, நிலஎடுப்பு சட்ட பிரிவு 3(1)இன் கீழான அறிவிக்கையும் 54.14.54 ஹெக்டேர் (134 ஏக்கர்) நிலங்க ளுக்கு பிரசுரமாகியுள்ளது. மீதமுள்ள பட்டா நிலங்கள் 24.40.02 ஹெக்டேர் (60  ஏக்கர்) 4 கிராமங்களின் பொதுமக்க ளின் நலன் கருதி மாற்றுப்பாதை அமைக்க திருத்திய நில திட்ட அட்ட வணை தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இப்பணி மூன்று  மாதத்திற்குள் முடிக்கப்படும். அரசு புறம் போக்கு நிலங்களை கையகப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. எனவே, தருமபுரி – மொரப்பூர் ரயில்  பாதை திட்டம் விரைவில் செயல்படுத் தப்படும், என்றார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, அரூர் வரு வாய் கோட்டாட்சியர் சின்னுசாமி, வட் டாட்சியர்கள் சண்முகசுந்தரம், கலைச் செல்வி ஆகியோர் கலந்து கொண்ட னர்.