tamilnadu

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா: டி.ஆர்.பாலு மீண்டும் மனு

சென்னை:
ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பாக, தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அதிமுக சார்பில் டி.டி.வி. தினகரன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அப்போது, தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக, தி.மு.க. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 4 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மக்களவையில் இந்த பிரச்சனையை எழுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.

;