சென்னை, ஏப். 11 - 200 தொகுதிகள் கூட கிடைக்காது என்ற தோல்வி பயத்தால் மோடி புலம்கிறார்; தூக்கமற்ற இரவுகளை கடக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு செவ்வாயன்று (ஏப்.9) பள்ளிக்கரணையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: பாஜக அரசின் தவறான பொரு ளாதார கொள்கையால் 7 கோடி சிறு, குறு தொழிற்சாலைகளில் 3 கோடி ஆலைகள் மூடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவை ஆதரித்த கோவை மார்வாடி சகோதர்கள்கூட, இப்போது ஓட்டு போட மாட்டோம் என்கிறார்கள். கொரோனா பெருந்தொற்றின் போது கோவில்களே மூடப்பட்டு கிடந்தன.
அந்த இரண்டு ஆண்டு களில் அதானியால் ரூ.2.50 லட்சம் கோடி லாபம் ஈட்ட முடிந்தது எப்படி? பொருளாதார வளர்ச்சியின் பலன் முழுமையாக மக்களை சென்றடைய வில்லை. முதியோருக்கு இருந்த ரயில் கட்டண சலுகையை ஒன்றிய அரசு பறித்தது. மக்களின் தாங்கும் திறனை தாண்டி விலையேற்றியது. ஏழ்மையை ஒழிப்பது மாறி மோடி ஏழைகளை ஒழித்துக் கொண்டு இருக்கிறார் பிரதமர். அவரைப் போன்று கொடிய சிந்தனை கொண்டவரை பார்க்க முடியாது.
வேலைவாய்ப்பற் றோர் புள்ளி விவரம் தயாரிப்பதையே நிறுத்திவிட்டார். மோடி சாப்பிட பொய் சொல்ல இரண்டே விஷயங் களுக்குதான் வாய் திறக்கிறார். ஆக்ஸ்பார்ம் அறிக்கைபடி உலகின் முதல் 100 பல்கலைக்கழகத்தில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. காரணம் கல்விக்கான ஒதுக்கீடு குறைவு. ஜிடிபி-யில் 0.79 விழுக்காடுதான் கல்விக்காக ஒதுக்குகிறார்கள். ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற அனைத்து திட்டங்களும் தோல்வி அடைந்து விட்டன.
உஜ்வாலா திட்டத்தில் அடுப்பு வாங்கியவர்களுக்கு சிலிண்டர் வாங்க தமிழ்நாடு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறது. அதனால்தான் படோடபமாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்பதில்லை. பாஜக ஒரு டிராமா கோஷ்டியாக உள்ளது. கிறுக்கர்களை விட கேவல மாக பேசுகின்றனர். திமுக இல்லாத தமிழகம், காங்கிரஸ் இல்லாத பாரதம் என மோடி பயத்தில் புலம்புகிறார். 200 தொகுதிகள் கூட கிடைக்காது என்பதால் தூக்கமற்ற இரவுகளை கடக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்ட விழுமியங்களை பாதுக்காக்க, நாட்டை துண்டாடும் பாஜகவை வீழ்த்து வோம். தமிழச்சி தங்கபாண்டியனை வெற்றிபெறச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் தலைமை தாங்கினார்.
தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற் குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர். சுரேஷ், திமுக 189வது வட்டச் செயலாளர் லயன் பாபு, துணைச் செயலாளர் குமரேசன், அவைத்தலை வர் வெற்றிவேல், சிபிஐ பகுதிச் செயலா ளர் கண்ணதாசன், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் கே.குணசேகரன், சீனிவா சன், கிளைச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.