சென்னை, மே 6- பொருளாதார ஏற்றத்தாழ்வு களுக்கு மோடி ஆட்சியின் பொரு ளாதாரக் கொள்கைகளே காரணம் என்று ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
மாமேதை காரல் மார்க்சின் 206ஆவது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சிறப்புக் கருத்தரங் கம் சென்னை ஓட்டேரியில் திங்க ளன்று நடைபெற்றது.
இதில் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், காரல் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து உருவாக்கிய மார்க்சியத் தத்துவம் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது. இருவரும் இணைந்து 1848ஆம் ஆண்டு பிப்ர வரி மாதம் வெளியிட்ட கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை இன்றும் உலக அளவில் விவாதப் பொரு ளாக இருக்கக் கூடிய முக்கியமான ஆவணம். உலக வரலாற்றை கிமு, கிபி என்பதற்கு பதில் மார்க்சுக்கு முன், மார்க்சுக்கு பின் என்று வரையறுக்கக் கூடிய வகையில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியவர்கள் மார்க்சும், ஏங்கெல்சும்.
இந்தியா உள்ளிட்டு மேலை நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வரும் நவீன தாராளமய பொருளா தாரக் கொள்கை கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வை உரு வாக்கி வருகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடு களில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. உலகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய மக்க ளில் 60 சதவிகிதம் பேர் இந்தியா வில் உள்ளனர்.
இந்த பொருளாதார ஏற்றழ்த் தாழ்வுகள் உருவாவதற்கான அடிப்படைக் காரணம் ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கைகள் தான். கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு மிகத் தீவிரமாக கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, கார்ப்பரேட் நிறுவனங் கள் வங்கிகளிடமிருந்து கடன் பெற்று திருப்பி செலுத்தாத 15 லட் சம் கோடியை தள்ளுபடி செய்தது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 11 லட்சம் கோடி வரிச் சலுகை அளித்தது போன்றவை பொருளா தார ஏற்றத் தாழ்வுகளில் இந்தியா முதல் இடத்திற்கு சென்றதற்கு காரணம்.
தேர்தல் காலத்தில் ஆளும் கட்சி யினர் தாங்கள் செய்த சாதனை களை கூறி வாக்கு கேட்பார்கள். ஆனால் மோடி தோல்வி பயத்தில் எதிர்கட்சிகளை மட்டுமே விமர் சனம் செய்து வருகிறார். காங்கி ரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒரு இடத்தில் கூட மறு பங்கீடு என்ற வார்த்தையோ, செல்வ வரி என்ற வார்த்தையோ கிடையாது. ஆனால் இதுகுறித்து மோடி தவறான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். இந் தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் உங்களிடம் இரண்டு வீடு இருந் தால் ஒரு வீட்டை எடுத்துக் கொள் வார்கள். இரண்டு மாடு இருந்தால் ஒரு மாட்டை எடுத்துக் கொள்வார் கள் என்று அபத்தமாக மோடி பேசு கிறார். தேர்தல் நடத்தை விதிமுறை களுக்கு மாறாக தொடர்ந்து மோடி பேசி வருகிறார். ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை.
அரசு பள்ளிகள் தேர்ச்சி விழுக் காடு அதிகரித்தது குறித்த கேள் விக்கு, முன்பெல்லாம் அரசு பள்ளி களை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக் கும். தற்போது பாராட்டத்தக்க வகையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் உள்ளது. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு பள்ளிகளில் சமீப காலமாக மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை உணவு திட்டம் கொண்டு வந்த பின் மாண வர்களின் சேர்க்கை விகிதம் பெரு மளவு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ் ணன் உடனிருந்தார்.