சென்னை,ஜன.25- ‘வெல்லும் ஜனநாய கம்’என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் திருச்சி மாவட் டம் சிறுகனூரில் ஜன.26 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது.
அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கி ரஸ் கட்சித் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியார், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வு ரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ. ஆர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கு கிறார். பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ, பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., மாநாட்டு பொறுப்பாளர் பெரம்பலூர் இரா. கிட்டு உட்பட இந்தியா கூட்டணி யில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள் கிறார்கள். தமிழ்நாடு அமைச்சர் கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம் பி க்கள் கலந்து கொள்கின்றனர்.