tamilnadu

சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும்

சென்னை, ஜன.9 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜன.9) சிறு பான்மையினர் நலன் குறித்த ஆலோ சனைக் கூட்டம் சென்னை தலைமைச்  செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், “கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் சான்று இனி நிரந்தர சான்றிதழ் வழங்கப் படும்.

தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் சான்றிதழ் இனி நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும்”என்றார். வழிபாட்டுத் தலங்களுக்கு அனு மதி பெறுவதில், பல இடர்பாடுகள் களைந்து நிலையான இயக்க நடை முறை வெளியிடப்படும். கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்.

ஜெரு சலேம் புனிதப் பயண நிதியுதவி  வழங்குவதற்கான திருத்தியமைக் கப்பட்ட வழிமுறைகள் இம்மாதத் தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள அரசு  நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரி வாக்கம் குறித்தும் வரும் நிதிநிலை  அறிக்கையில் சாதகமாக பரிசீலிக் கப்படும். அரசு நிதி உதவி பெறும் சிறு பான்மையினர் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  தமிழ் வழியில் பயின்ற மாணவிகளை  புதுமைப் பெண் திட்டத்தில் சேர்த்தல்  குறித்து நிதிநிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.