சென்னை, ஆக.27- நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு, தமிழ்நாடு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பி யுள்ளார். நடப்பு கல்வியாண்டிற்கான இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுகளைக் கைவிடுவது குறித்தும், குறிப்பாக நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ள சூழலில், அதை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்து ஏற்கனவே மோடியிடம், இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், பன்னிரண்டாம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண் களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் முந்தைய முறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நடப்பாண்டில், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு உள்பட அனைத்து மாநில அரசுகளும் கடந்த பல மாதங்களாக கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டம் நடத்திவருகிறது. இந்த நேரத்தில் நீட் தேர்வை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளையும் எடுத்துக் கொண்டாலும் அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பெரும் தொற்று நோய்க்கு ஆளாக நேரிடும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்தாண்டு நீட் தேர்வைத் நடத்து வதைக் கைவிட வேண்டும். மேற்கூறியவற்றைக் கருத்தில்கொண்டு, 2020-21ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை, நீட் தேர்வை ரத்துசெய்தும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்த வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.