சென்னை, ஏப்.2- வரும் மக்களவைத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்தி, மாநில உரி மைகளைப் பாதுகாக்கும் போராட் டத்தில், ‘இந்தியா’ கூட்டணி வேட் பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, மார்ச் 23 முதல் திமுக இளைஞ ரணிச் செயலாளரும் விளை யாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஏப்ரல் 2 அன்று வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீரா சாமியை ஆதரித்து கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பிருந்தா திரையரங்கம் அருகிலிருந்து உதய நிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை துவக்கினார்.
அப்போது, “கோவிட் பெருந் தொற்று, பெரு மழை, வெள்ள பாதிப்புகள் போது தமிழ்நாடு பக் கம் எட்டிப் பார்க்காத பிரதமர் மோடி, இப்போது அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். அவர் எத் தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்” என் றார். “சசிகலா காலில் விழுந்து முதல மைச்சரான எடப்பாடி பழனிசாமி, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள விலை போனார். மாநில உரிமைகள் முழுவதையும் ஒன்றிய பாஜக அரசிடம் அடகு வைத்தார்.
அதிமுக அமைச்சர்கள் மீதும் சிபிஐ ரெய்டு, ஐடி ரெய்டு என பல வழக்குகளை பதிவு செய்து, பாஜக வின் கட்டுப்பாட்டில் அடிமைகளாக வைத்துக் கொண்டனர். அதற்கு பலனாக சிஏஏவுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களித்தனர். இவை அனைத்தையும் தமிழக மக் கள் மறக்கவில்லை. கடந்த முறை ஒன்றாக தேர் தலை சந்தித்த நமது எதிரிகள் இப் போது பிரிந்து வருகின்றனர். இத னால், நமக்கு வெற்றி மிக சுலபம் என நினைத்து விடாதீர்கள். தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மோடி, எடப் பாடி கூட்டணிகளுக்கு பாடம் புகட்ட ஏப்ரல் 19 அன்று நாம் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு” என்றும் உதயநிதி கூறினார்.