சென்னை, ஜன. 21- தமிழ்நாட்டில் திங்களன்று கோவில்களில் பூஜை செய்ய தடை யில்லை என்றும் நிர்மலா சீதா ராமன் பொய்ச் செய்தியை பரப்புவ தாகவும் அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாடு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப் பித்து உள்ளதாகவும், இது பக்தர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது என்றும் தினமலர் செய்தி வெளியிட்டு இருந்தது.
இதனை மீறி அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகள் நடந் தாலும் சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப் பட்டு உள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அறநிலையத் துறையால் நிர்வகிக் கப்படும் கோவில்களில் ராமர் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் அனுமதிக்கப்பட வில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் காவல் துறையினர் தடுத்து வருகின்றனர்.
பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப் பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக் கிறேன் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாநில அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள் ளார். மேலும், முற்றிலும் உண்மைக் குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக் குரியது என்றும் அவர் குற்றம்சாட்டி யுள்ளார்.