tamilnadu

img

கொரோனாவிலிருந்து மீண்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ.... 

சென்னை
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 8 எம்எல்ஏ-க்கள், 3 அமைச்சர்களை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. 

இதில் சென்னை சேப்பாக்கம் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்பத்தூர் அதிமுக எம்எல்ஏ பழனி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், மற்ற எம்எல்ஏ-க்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எம்எல்ஏ-க்கள் மட்டுமின்றி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தொழிலாளர்துறை அமைச்சர் நிலோபர் கபில் (பெண்) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  கே.பி. அன்பழகன் 2 நாட்களுக்கு முன் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும் இன்று (வெள்ளி) வீடு திரும்பியுள்ளார்.  இந்த தகவலை அவர் சிகிச்சை பெற்று வந்த சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

;