சென்னை, ஏப். 5 - 10 ஆண்டு கால ஆட்சியில் செயல் படுத்திய திட்டங்களை கூறி பாஜக வினரால் வாக்கு கேட்க முடிகிறதா? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.
தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வெள்ளி யன்று (ஏப்.5) வேளச்சேரி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், சிபிஎம் தென்சென்னை விசேஷ கிளை பதிப்பித் துள்ள ‘காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்’ எனும் நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் வெளியிட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண் டார்.
இந்நிகழ்வில் மா.சுப்பிரமணியின் பேசுகையில், வேளச்சேரி வெள்ளச் சேரி என்று இருந்ததை திமுக அரசு மாற்றியுள்ளது. வடிகால்வாய்கள் அமைத்து, கால்வாய், ஏரிகளை சரி செய்ததன் காரணமாக ஓரிரு தினங்க ளில் வெள்ளம் வடிந்துவிட்டது. சென்னை மாநகரத்திற்கு இணையான கட்டமைப்பை புறநகர்ப் பகுதிகளும் பெற்று வருகின்றன என்றார்.தமிழ் நாடு அரசு 30க்கும் மேற்பட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 10 ஆண்டுகால ஆட்சியில் பாஜக வினர் செயல்படுத்திய ஏதாவது ஒரு திட்டத்தை கூறி வாக்கு கேட்க முடி கிறதா? தமிழக அரசின் திட்டங்களை முன்னிறுத்தி கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இரண்டு மடங்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.\
கண்காணிப்பு கருவி
வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் பேசுகையில், “காற்று மாசு அதிகம் உள்ள வேளச்சேரி பகுதியில் கண்காணிப்பு கருவி பொருத்த கோரி வருகிறேன்” என்றார்.
திமுக விளையாட்டு பிரிவு செய லாளர் வே.ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்தக் கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜ குமாரி, பகுதிச் செயலாளர் எஸ். முகமது ரஃபி, தமிழ்நாடு பொது மேடை தலைவர் தியாகு, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, திமுக பகுதிச் செயலாளர் அரிமா சேகர் உள்ளிட்டு கூட்டணிக் கட்சியின் கலந்து கொண்டனர்.