ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் - ஆட்சியர் புறக்கணிப்பு
சென்னை, செப்.18- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பய ணமாக நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்நிலையில் ஆளுநர் பங்கேற்றுள்ள பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் ஆட்சியரும் பங்கேற்கவில்லை. வேதா ரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி யில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்கவில்லை.
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா: கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு
சென்னை,செப்.18- திமுகவின் 75 ஆவது ஆண்டு பவள விழா, பெரியார், அண்ணா ஆகிய தலைவர்கள் பிறந்தநாள் விழா என 3 விழாக்களும் ஒன்றாக சேர்த்து முப்பெரும் விழாவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திமுக பவள விழா பொதுக்கூட்டத்தை வருகிற 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் நடத்துவது என்று திமுக முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தலைமை வகிக்கிறார். இதில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களான தி.க.வின் கி.வீர மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, சிபிஐ மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன், முஸ்லிம் லீக் கே.எம். காதர்மொய்தீன், விசிக தலைவர் தொல்.திருமா வளவன், கமல்ஹாசன், எம்.எச்.ஜவாஹிருல்லா, எல்.ஆர். ஈஸ்வரன், தி.வேல்முருகன், அதியமான், கருணாஸ், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர்.
திருவள்ளுவர் பிறந்தநாள்: அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
சென்னை,செப்.18- திருவள்ளுவர் பிறந்தநாளை வைகாசி மாதத்தில் அனுஷ நட்சத்திர தினத்தில் கொண்டாட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி திருவள்ளு வர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சாமி தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆகவே, அந்த தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது. திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தை 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப் படுகிறதே தவிர அது பிறந்த நாளாக அறிவிக்கப்பட வில்லை என்று தெரிவித்து, மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திரைக் கலைஞர் சிஐடி சகுந்தலா காலமானார்
சென்னை,செப்.18- திரைக்கலைஞர் சிஐடி சகுந்தலா காலமானார். தமிழ்நாட்டில் சேலம் மாவட் டம், அரிசிபாளையத்தைச் சேர்ந்த இவர், 1970 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிஐடி சங்கர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறி முகமானார். இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதனால் சிஐடி சகுந்தலா என்ற அடைமொழி அவ ருக்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். பெங்களூருவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை
சென்னை, செப்.18- சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
சென்னை பிராட்வே பிஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் என மொத்தம் 59 வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்து வெளிவந்த பாலாஜி ஆந்திர எல்லையோர பகுதிகளில் பதுங்கி இருந்து வழக்கம்போல தனது ஆட்கள் மூலம் ரவுடியிசம், கட்ட பஞ்சா யத்து, மாமூல் வசூலில் ஈடுபட்டுவந்தார்.
தலைமறைவாக இருந்த பாலாஜியை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை (செப்.18)அதிகாலை சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதி யில் காவல்துறையினர் தணிக்கையில் ஈடு பட்டிருந்த போது பாலாஜி சிக்கி யுள்ளார். அப்போது காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்துள் ளார். தற்காப்புக்காக காவல்துறையினர் பாலாஜியை சுட்டனர். பின்னர், மயங்கி விழுந்த பாலாஜியை காவல்துறையினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் பாலாஜி உயிரிழந்தார்.
அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் மறைவு
சென்னை,செப்.18- திமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் ஆதிதிராவிடர் நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம் புதனன்று (செப்.18) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 76.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த இவர், திமுக பட்டியலின தலைவர்களில் முக்கிய மானவர் ஆவார். இரண்டு முறை திரு வள்ளூர் மாவட்ட, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1989 மற்றும் 1996-2001 ஆம் ஆண்டு களில் பால் வளம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்துள் ளார். மேலும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். கட்சி யில் கடுமையாக உழைத்த சுந்தரத்தை பாராட்டும் வகையில் அண்ணா விருதை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “கலைஞர் அமைச்சரவையில் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் க. சுந்தரம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தி னருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்” என தெரிவித்துள்ளார்.