tamilnadu

மினி பேருந்து தேவையற்றது: அமைச்சர்!

 சென்னை,ஜூலை 11- தமிழக சட்டப்பேரவையில் கேள்வி  நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பி னர் கோ.வி.செழியன், போக்குவரத்துத் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மினி  பேருந்து சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கோரினார். அதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர்,  அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரு வதாகவும், போக்குவரத்து துறை கடுமை யான நிதி நெருக்கடியில் உள்ள சூழலில்  மினி பேருந்து தேவையில்லாத ஒன்று என வும் கூறினார். கிராமங்களில் உள்ள குறுகலான சாலைகளில் பெரிய பேருந்துகள் செல்ல  முடியாத காரணத்தால்தான் மினி பேருந்து  சேவை துவங்கப்பட்டது. இதில் லாப நோக் கம் பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் எந்த காலத்திலும் போக்குவரத்து துறை  லாபத்தில் இயங்காது. எனவே, சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர், பேருந்துகள் அதிகம் இயங்கும் வழித்  தடங்களில் மட்டுமே மினி பேருந்து சேவை  நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துறை யில் அரசு லாப நோக்கத்தை எதிர்ப்பார்க்க வில்லை. சேவை நோக்கில்தான் இயக்கி வருகிறது. பேருந்துகள் இயங்காத வழித்  தடங்களில் மினி பேருந்துகளை இயக்க  தனியார் யாரும் முன்வராத காரணத்தால் 1500 மினி பேருந்துகளின் உரிமம் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது.