சென்னை,நவ.26- சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட 2வது கட்ட சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற வருகின்றன. பறவைகளின் பெயர்களை கொண்டுள்ள ஃபிளமிங்கோ, ஈகிள், பெலிகன் மற்றும் மயில் ஆகிய 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் சென்னையில் பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் நடைபெறும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சுரங்கங்கள் தோண்டும் போது கடுமையான பாறைகள் உள்ள தால் இயந்திரங்களில் உள்ள ‘கட்டர்ஹெட் எனப்படும் பிளேடு கள் சேதமடைந்துள்ளன. இதனால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூற்றின் படி சுரங்கத்தில் துளையிடும் பணிகளை மேற்கொள்ளும் இயந்தி ரங்களில், இவை மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். இது பூமியில் சுழன்று மற்றும் துளை யிட்டு ஒரு சுரங்கப்பாதையை உரு வாக்க உதவுகிறது.
“கட்டர்ஹெட் தலை யீடு என்பது ஒரு வழக்கமான செயல் ்முறையாகும். தொடர்ச்சியான துளை யிடுதல் பணி மேற்கொள்ளப்படுவதால் அவை தேய்மானம் அடைந்துள்ளன. விரைவில் பிளேடுகள் மாற்றப்பட்டு பணிகள் தொடரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூ.63,246 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கத்தில் இருந்து மயிலாப்பூர், தி.நகர், கோடம்பாக்கம் வழியாக பூந்த மல்லி வரை பாதை அமைக்கப்படு கிறது. இதில் சில இடங்களில் கலங்கரை விளக்கத்தில் இருந்து வடபழனி வரை சுரங்கப்பாதையில் ரயில் செல்லும். பின்னர் உயர்மட்ட மேம்பாலத்தில் ரயில் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலத்தடிப் பகுதியில், கலங்கரை விளக்கம் முதல் மயிலாப்பூர் கச்சேரி சாலை வரை இரு புறமும் பனகல் பூங்கா முதல் கோடம்பாக்கம் வரை ஒரு புறமும் சுரங்கம் அமைக்கும் பணி களில் துளையிடும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களில் உள்ள பிளேடுகளை மாற்றுவதற்கு 3 முதல் 10 நாட்கள் வரை ஆகலாம். கலங்கரை விளக்கம் - கச்சேரி சாலைக்கு இடையில் துளையிடும் போது அங்கு நிலத்தடியில் மணல் இருந்த காரணத்தால் பணிகள் விரை வாக நடைபெற்றன. இயந்திரங்கள் பழுதாகவில்லை. பனகல் பூங்கா முதல் கோடம்பாக்கம் இடையே கடினமான பாறை உள்ளதால் துளையிடும் இயந்தி ரம் கடுமையான தேய்மானத்தை எதிர் கொண்டுள்ளது.இதனால் தற்போது தற்காலிகமாக இந்தபகுதியில் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
இயந்திரங்கள் பாறைகள் வழியாக துளையிடும்போது இயந்திரங்களில் உள்ள பிளேடுகள் உடைபடுகின்றன. இந்த மாத தொடக்கத்தில், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள் கசிந்ததால், கலங்கரை விளக்கம் கச்சேரி சாலை இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இந்த சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.