tamilnadu

img

மெட்ரோவில் இனி ஞாயிறன்று 50 சதவிகித கட்டணம்

சென்னையில் ஞாயிற்று கிழமைகளில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. 
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. வார விடுமுறை  நாளான ஞாயிறன்று மெட்ரோவில் அதிக பயணிகள் செல்வதால் 8 மணி முதல் சேவைகள் இயங்கி வந்ததை மாற்றி  பயணிகள் கோரிக்கையை ஏற்று காலை 6 மணிக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில்  மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.