சென்னை,நவ.30 சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள பாலவித்யா மந்திர் பள்ளி யில் இளம் தொழில்முனை வோர் மாநாடு நடை பெற்றது. 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளி பாடத்திட்டத்திலேயே தொழில்முனைவோராக உருவாவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2019-20 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இதுகுறித்த புரிதல் ஏற்படுத்துவதற்காக இளம் தொழில்முனைவோர் அழைக்கப்பட்டனர். வேளாண்மை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறை களில் வெற்றி கண்ட இளம் தொழில்முனைவோர் இதில் கலந்துகொண்டு மாண வர்களிடையே பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி னர். முன்னதாக இந்த மாணவர்களுக்கு பள்ளியின் இளம் தொழில்முனைவோர் திட்ட ஆலோசகர் எஸ்.என். பத்மஜா பயிற்சி அளித்தார். பள்ளியின் தலைமை ஆசிரி யர் டாக்டர் சீனிவாசன், துணைமுதல்வர் டேஃப்னி ரோட்ஜெர்ஸ், ஆசிரி யர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. சோப்பு செய்தல், புகை ப்படம் எடுத்தல், நறு மனப்பொருட்களை தயா ரித்தல், துணிசோப்பு, ஷாம்பூ தயாரித்தல், நகை வடிவமைத்தல், அலங்கால விளக்குகள் தயாரித்தல், கழிவுப்பொருட்களை கொண்டு உபயோகமான பொருட்களை தயாரித்தல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்கனவே தொழில்முனைவோராக உள்ள கவுதம் பரத்வாஜ், சேத்தன் கோராடா ஆகி யோர் சிறப்பு விருந்தினர்க ளாக கலந்துகொண்டனர்.