tamilnadu

img

மருத்துவ மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு...

சென்னை:
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திங்களன்று (நவ. 16) சென்னையில் வெளியிட்டார். புதனன்று (நவ. 18) முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 4,981 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,760 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியதை அடுத்து மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கின.அதன்படி, இணையதள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை கடந்த வியாழக்கிழமை (நவ.12) வரை சமர்ப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு சுமார் 25,000 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,000 பேரும் விண்ணப்பித் திருந்தனர்.

இந்நிலையில்,  நடப்பாண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வெளியிட்டார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:நீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண் ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

3 ஆயிரத்து 650 மருத்துவ இடங்களுக்கு 34 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது.7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 710 மதிப்பெண்களுடன் ஈரோடு பள்ளி மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்தார்.நாமக்கல்லை சேர்ந்த மோகனப்பிரபா 705 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடம் பிடித்தார்.சென்னை அயனம் பாக்கத்தைச் சேர்ந்த ஸ்வேதா 701 மதிப்பெண் பெற்று 3வது இடம் பிடித்தார்.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள்ஒதுக் கீட்டில் தேனி சில்வார்பட்டி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

கலந்தாய்வு
மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (நவ. 18) தொடங்கும் என்று அமைச்சர் தெரி வித்தார்.கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள் ளும் வகையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.நவம்பர் 18 ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.