tamilnadu

img

ஜிஎஸ்டி-யை குறைக்க நடவடிக்கை ஏசி சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் உறுதி

சென்னை, நவ. 27 - ஏர்கண்டிஷ்னர் (ஏசி) சர்வீசுக்கான ஜிஎஸ்டி-யை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு ஏர்கண்டிசன், ரெப்ரிஜிரேசன் என்ஜினி யர்ஸ் அண்டு டெக்னீஷி யன்ஸ் யூனியன் சங்கத் தலைவர் வி.ரவிசங்கர், அமைச்சர் டி.ஜெயக்கு மாரை சந்தித்து மனு அளித்தார். அப்போது, ஏசி உள்ளிட்ட பொருட்களை பழுதுபார்க்கும் டெக்னீஷி யன்களுக்கு மார்ச்  முதல் ஜூன் வரையிலான 4 மாத காலம்தான் அதிகப்படியான வேலை இருக்கும். இந்த தொழிலை பெரும்பாலும் இளைஞர்களே செய்கின்ற னர். அவ்வப்போது பணி யின்காரணமாக பித்துக்கள் ஏற்பட்டு உடலுறுப்புகள் இழப்பு உயிரிழப்பு போன்றவை நிகழ்கின்றன. இத்தகைய சிரமமான தொழில் நிலையில், ஏசி விற்பனைக்கு 28 விழுக்காடும், சர்வீசுக்கு 18 விழுக்காடும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஏசி விற்பனைக்கு 12 விழுக்காடு, சர்வீசுக்கு 3  விழுக்காடு என்ற அளவில் ஜிஎஸ்டி-யை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியு றுத்தினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், சர்வீசுக்கான ஜிஎஸ்டி-யை குறைக்க கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்ததாக ரவிசங்கர் தெரிவித்தார்.