tamilnadu

img

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை: மாயாவதி

சென்னை, ஜூலை 7- சென்னை பெரம்பூரில் பகுஜன்  சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி யன்று கொடூரமாக வெட்டிக் கொலை  செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல  ரவுடி ஆற்காடு சுரேஸ் தம்பி உட்பட  8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். மேலும் 3 பேரை கைது செய்து  அவர்களிடம் போலீஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர்

இந்நிலையில், அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்து பின்னர் குடும்பத்தினர் மற்  றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர் தற்காலிக வசித்து வந்த அயனாவரம் இல்லத்திற்கு உடல்  கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, காங்கி ரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். 

அதனைத்தொடர்ந்து, பகுஜன்  சமாஜ் கட்சி தலைமை அலுவலக மான பெரம்பூர் சடையப்பன் தெரு வுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிறிது நேரம் வைக்கப்பட்டது. பின் னர், பொதுமக்கள் மற்றும் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் அஞ்சலிக்காக பெரம்பூர் பந்தர் கார்டன்  பகுதியில் உள்ள அரசு மேல்  நிலைப்பள்ளி பள்ளியில் வைக்கப் பட்டது.

மாயாவதி அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பிற அர சியல் கட்சி தலைவர்கள் திரைப்பட  பிரபலங்கள், பொதுமக்கள் உள் ளிட்ட பலரும் இந்நிலையில் அக்கட்சி யின் தேசிய தலைவர் மாயாவதி ஞாயிறன்று காலை 10.50 மணி அள வில் பெரம்பூர் பந்தர்கார்டன் பள்ளி யில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்  உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி னார். அப்போது ஆம்ஸ்ட்ராங்  மனைவி பொற்கொடிக்கு மற்றும்  அவரது குடும்பத்தினர், உறவினர் களுக்கு ஆறுதல் கூறினார்.அவரு டன் கட்சியின் தேசிய ஒருங்கி ணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் உட னிருந்தார்.

பின்னர் மாயாவதி பேசுகையில்,  ”புத்தர் காட்டிய மனிதாபிமானப் பாதையில் பயணித்தவர் ஆம்ஸ்ட்  ராங். அவர் அவரது வீட்டுக்கு அரு கேயே படுகொலை செய்யப்பட்டி ருக்கிறார். அந்தத் துயரச் செய்தி யைக் கேட்டு மிகுந்த வேதனைடைந் தேன். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு தமிழக அரசு பாதுகாப்பு தர வேண்டும்.

இந்தக் கொலை தொடர்பாக கை தானவர்கள் உண்மைக் குற்றவாளி கள் அல்ல என்ற தகவல் கிடைத்துள்  ளது. எனவே, இந்தக் கொலை சம்ப வம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. சட்டம் தன் கடமையை செய்  யட்டும். கட்சியினர் யாரும் சட்டம்,  ஒழுங்கை கையில் எடுக்க வேண்டாம்  என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் பட்டியலின மக்க ளின் நலன் காக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத் துக்கு பகுஜன் சமாஜ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் 

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் உட லுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலை  சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு மாவளவன் எம்.பி., கூறுகையில் , “எந்த பதவி ஆசையும் இல்லாமல் அம்பேத்கரின் கருத்துக்களை மக்க ளிடம் கொண்டு சேர்த்தவர் ஆம்ஸ்ட்ராங்.  அவரது படுகொலை கோழைத்தன மானது. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்காக பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ் நிலையில் இருக்கிறார்கள்”என்றார்.