tamilnadu

img

தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள் நல வாரியம்.... அரசு அறிவிப்பு....

சென்னை:
தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொழிலாளர் நலத்துறை அமைச்சரைத் தலைவராகவும், அரசுப் பிரதிநிதிகளாக செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆகியோரும் அலுவல்சாரா உறுப்பினர்களாக, வேலையளிப்போர் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை சார்பான பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை சார்பான பிரதிநிதி மற்றும் தொழிற் கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகியோரும், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை தொழிற் சங்கத்தின் பிரதிநிதி மற்றும் பிற தொழிற்சங்க பிரதிநிதி ஆகியோர் அடங்கிய வாரியம் அமைப்பதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

ேற்கூறிய ஆணைக்கிணங்க அரசாணை எண்.214, தொ (ம) வே.வா துறை, நாள் 30.12.2020-ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள 62 ஆயிரத்து 661 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்நலவாரியம் தொடங்கப்படும்.இன்றைய தேதியில் 1,250 பட்டாசு தொழிற்சாலைகளும், 870 தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இதில், ஏறத்தாழ 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருவதாகத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார்.இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அமைக்கப்படவிருக்கும் புதிய நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயன்பெறலாம். இந்நலவாரியத்தின் தலைமையிடம் சென்னையில் செயல்படும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.