tamilnadu

img

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் மழைவெள்ள நிவாரணம் வழங்குக விழுப்புரம் ஆட்சியரிடம் மாதர் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம்,டிச.6- விழுப்புரம் மாவட்டத்தில், குடும்ப அட்டை இல்லாதவர்களும் புயல், மழை-வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள் ளதால் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யரிடம் மாதர் சங்க மாநிலத் தலை வர்கள் வலியுறுத்தினர்.

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் மரக்காணம் அருகே கரையை கடந்தது.இதனால், விழுப்புரம் மாவட்ட த்தில் மழை வெளுத்து வாங்கியது. மயிலம் பகுதியில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீட்டர் மழை பொழிந்தது. மறுபக்கம், சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் உபரி நீர் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.ராதிகா, மாநில துணைத் தலைவர் பி.சுகந்தி, மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா  ஆகியோர் கொண்ட குழுவினர் பார்வை யிட்டனர்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஆஷாகுளத்தில் தங்களது ஆய்வு பயணத்தை துவக்கினார். விக்கிர வாண்டி வட்டம் வி.சாத்தனூர், திரு வெண்ணைநல்லூர் வட்டம்  இரு வேல்பட்டு, காரப்பட்டு ஆலங்குப்பம், ஆனங்கூர், பனம்பட்டு ஆகிய பகுதி களுக்கு சென்றனர். அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, வி.சாத்தனூரில் கூரை வீடுகள் மூழ்கியதால்  வீடுகளில் இருந்த துணி மணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டது.

ஆடு, மாடு, கோழிகள் நீரில் அடித்துச் சென்றுவிட்டது. தற்போது வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். இதுவரையிலும் தங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை. பாதிப் புகளை கணக்கெடுக்கும் அதிகாரிகள் வரவில்லை என்று கிராம மக்கள் தெரி வித்தனர். சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேத மடைந்ததையும் விவசாயிகள் வேத னையுடன் மாதர் சங்கத் தலைவர் களிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வு களுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தனர்.

அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்த னர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாதர் சங்கத் தலைவர்கள், புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீடுகள் தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து சேதங் களை முமையாக கணக்கெடுக்க வேண்டும். விளை நிலங்களையும் நேரில் பார்வையிட வேண்டும். விவசாயிகளை யும் சந்தித்து பாதிப்புகள் குறித்து முழு மையாக கேட்டறிந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடியாக சுகாதா ரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீர் தேங்கி, சேறும் சகதியு மாக மாறி துர்நாற்றம் வீசும் பகுதி களில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் போர்க்கால அடிப்படை யில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக் கொள்ள வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். வீடு இழந்தோருக்கு உடனடியாக வீடு கட்டி தர வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தினோம் என்றனர்.  மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சி யர் பழனி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  இந்த சந்திப்பின்போது மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இலக்கிய பாரதி, நீலா ஆகியோர் உடனி ருந்தனர்.