மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளர்ச்சிப் பிரச்சாரம்
மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11ந் தேதி முதல் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஞாயிறன்று (ஜூன் 15) பர்மா காலனி மக்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பிரச்சாரம் செய்தார். இதில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.முகமதுரஃபி, எம்.ஆர்.சுரேஷ், தீ.சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மேல் சோழங்குப்பம் பகுதியில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் டி .கே. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. லட்சுமணன், வட்டார செயலாளர் பி. சுந்தர் இடைக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலையின்மை, விலைவாசி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பூர் பார்வதி நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தை செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார்,, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், ஜி.நித்தியராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை என்எஸ்கே நகரில் என்எஸ்கே நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தை மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் துவக்கிவைத்து பேசினார். அண்ணாநகர் பகுதிக்குழு உறுப்பினர் எம்.ஆனந்தன் தலைமை தாங்கினார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சுந்தரம், கே.மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் தமிழக அரசு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும் சிதம்பரம் நகரில் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் துவக்கிவைத்தார். நடைபயண பேரணியை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி கருப்பையன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மல்லிகா, முத்துகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலையின்மை, விலைவாசி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவொற்றியூர் ராமநாதபுரத்தில் வடக்கு பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தை மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.