tamilnadu

நிதி ஒதுக்கீட்டில் தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகம்!

சென்னை, ஜன. 6 - கனமழை - வெள்ளப் பாதிப்புக்கு தமிழக அரசு கோரியிருக்கும் நிவாரண நிதி ரூ. 38 ஆயிரம் கோடியை வழக்காத ஒன்றிய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானம் வருமாறு: தமிழகத்தில் மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழி வினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு இதுவரை தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யாத தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடுமையான துய ரங்களைச் சந்தித்த தமிழக மக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு செய்யும் மாபெரும் துரோகம் இது.

மிக்ஜம் புயல் - வெள்ளம் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ளப் பெருக்கினால் சென்னை மற்றும் அருகாமை மாவட்ட மக்களும், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். தங்களது வீடு, உடைமைகளை இழந்த மக்களும், விவசாயிக ளும், மீனவர்களும், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களும், சிறு கடை வணிகர் கள், உப்பளத்  தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் சொல்லொண்ணா துயரங்க ளைச் சந்தித்தனர். வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழுவினரும், ஒன்றிய அமைச்சர்களும் நேரில் பார்வையிட்டு பாதிப்புகளை ஆய்வு செய்துள்ள னர். 

உண்மைக்கு மாறாகப் பேசும் பிரதமர் 
முதலமைச்சரும் பிறகு இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் பிரதமரை நேரில் சந்தித்து பாதிப்புகளை எடுத்து ரைத்து, ஒன்றிய அரசு உரிய நிவாரண நிதியினை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இவ்வளவுக்கு பின்னரும்  நிவாரணப் பணி களுக்கென இதுவரை தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய பாஜக அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

இந்நிலையில் புயல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிதியினை தருவ தற்கு பதிலாக, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டி லிருந்து வரிப்பணம் பெற்றதை விட அதிகமாக வழங்கப்பட்டதாகக் கூறி வெள்ள நிவாரணத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்ற வகையில் ஒன்றிய நிதியமைச்சர் பேசியுள்ளார்.

இதையே பிரதம ரும் வழிமொழிந்து உண்மைக்கு மாறான விபரங்க ளை எடுத்துக்கூறி வருகிறார். ஆனால், தமிழ கத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் நேரடி வரித்தொகையில் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது என்பதே உண்மை நிலையாகும். இந்தியாவில் பாஜக அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களில் குறைந்த அளவிலேயே நிதி பகிர்வுகளை அளிப்பதும், தேசிய பேரிடர் காலங்களில் நிதி ஒதுக்கீடு செய்யாமலும், அம்மாநில அரசுகளை கடுமையான நிதி நெருக்கடி யில் சிக்க வைத்து மாநில அரசையும், நிர்வாகத்தை யும் சீர்குலைக்கும் நோக்கோடு ஜனநாயக கூட்டாட்சி முறைக்கு விரோதமான நடவடிக்கை களையே ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரு வதை நாடறியும். அந்த அடிப்படையிலேயே தமிழ கத்தையும் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வரு கிறது.

எனவே, ஒன்றிய பாஜக அரசு அரசியல் உள் நோக்கத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் செயல் படுவதை கைவிட்டு விட்டு, வரலாறு காணாத புயல் மற்றும் கனமழையினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ. 37,907 கோடியை உட னடியாக வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.