மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக மும்பை யில் போராட்டம் நடத்த உள்ளதாக மராத்தா ஆர்வலர் மனோஜ் ஜாரங்கே அறிவித்துள்ள நிலை யில், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், “சட்டம் - ஒழுங்கை மீறினால் யாராக இருந்தாலும் விட்டு வைக்க முடியாது. கடும் நடவடிக்கை எடுப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். அஜித் பவாரின் எச்சரிக்கையால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் ஆட்டத்தை துவங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 756 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,049 ஆக உள்ள நிலையில், கேரளம் மற்றும் மகாராஷ்டி ரத்தில் தலா இருவரும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு வரும் என 5 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெயர் பலகை யில் 60 சதவீதம் கன்னடத்தில் எழுத வேண்டும் என்ற திருத்த சட்டத்துக்கு கர்நாடக அமைச்சர வைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
2024-ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்கு 1.75 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளை யர்கள் கைவரிசை காட்டுவதால், அப்பகுதி பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்படும் என்று கடற் படைத் தலைவர் ஆர்.ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.