tamilnadu

img

சென்னையை மிரட்டிய மாண்டஸ்

சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக பல பகுதிகளில் காற்றோடு மழை பெய்தது. 
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் துவங்கி அதிகாலை 3 மணியளவில் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் லேசான காற்றே வீசியது. மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. கோவளம் கடற்கரை பகுதியில் இருந்த கடைகள் சேதம் அடைந்தன.  
இதையடுத்து தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 15.7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கம் மீனம் பாக்கத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் லட்சுமி(45) மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை முடித்துவிட்டு வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் திரும்பும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
புயல் பாதிப்புகளை தொடர்ந்து சீரமைக்கும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.