சென்னை, மார்ச் 12- மனோன்மணியம் சுந்தரனார் பல்க லைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க. நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திரு நெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியா குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட அரசு கலை -அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கள் இயங்கி வருகின்றன. இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்க லைக் கழக நிர்வாகம் தேர்வு கட்டணம், விண் ணப்பக் கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்ட ணம், முனைவர் பட்ட சான்றிதழ் கட்டணம், செய்முறை தேர்வு கட்டணம் உள்ளிட்ட 56 வகை யான பிரிவுகளில் கட்டணங்களை உயர்த்தி, மார்ச் 10 அன்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கி றது. தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஆண்டு தேர்வு கட்டணத்தை உயர்த்தி வருகிறது. தாளின் விலை ஏற்றம் என்று காரணம் காட்டி மதிப்பெண் சான்றிதழ் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்துவது கண்டிக்கத்தக்கது
பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறு கட்ட ணத்தை உயர்த்துவது ஏழை எளிய மாண வர்களின் உயர்கல்வி கனவை பின்னுக்கு இழுக்கும் நடவடிக்கையாகும். அதுமட்டு மின்றி சில நேரங்களில் கால அவகாசம் கூட நீட்டிக்காமல் குறுகிய காலத்தில் கடைசி தேதி யை நிர்ணயிக்கிறது. இதனால் தனியார் கல்லூரிகளில் தண்டனைத் தொகை என்ற பெயரில் பல ரூபாய்களை வசூல் செய்து வேட்டையாட இந்த அறிவிப்பு ஏதுவாக அமைந்துவிடுகிறது. தேர்வு கட்டணமானது பல்கலைக்கழகம் நிர்ணயித்த ஒரு பாடத்திற்கு ரூ. 140 எனவும், அதிகபட்சமாக இளங்கலை சான்றிதழ் வாங்க ரூ.3 ஆயிரம் மற்றும் என்ஓசி (NOC) சான்றிதழ் வாங்க ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த அறிவிப்பு ஏழை மாண வர்களுக்கான அறிவிப்பாக தெரியவில்லை. தென்மாவட்டங்களில் உயர்கல்வி படிப்பை படிக்காமல் மாணவர்களின் இடைநிற்றல் என் பது இக்காலத்தில் அதிமாக உள்ளது. இச் சூழ்நிலையில் இந்த அறிவிப்பு மாணவர் களுக்கு பெரும் சுமையும் அச்சத்தையும்தான் ஏற்படுத்தும். உயர்த்தப்பட்ட தேர்வு கட்ட ணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண் டும், ஏழை எளிய மாணவர்களின் உயர் கல் விக்கான வாய்ப்பை மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகம் உருவாக்கிட வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மூட்டா கண்டனம்
மூட்டா மூன்றாம் மண்டலச் செயலாளர் பி. சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு பருவத்திற்கு உரிய தேர்வு கட்டணம் ரூபாய் ஆயிரத்திற்கும் மேல் நிர்ணயக்கப்பட்டு ஓராண்டிற்கு பல்லாயிரக்க ணக்கான ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தற்பொழுது மீண்டும் தேர்வு கட்டணம், சான்றிதழ் கட்டணம் உட்பட அனைத்து கட்ட ணங்களையும் கூடுதலாக 40 முதல் 50 சத வீதம் வரை உயர்த்தி இருப்பது அனைவருக் கும் மிகவும் வருத்தம் அளிக்க கூடிய செயலாக உள்ளது. திடீரென இரண்டாவது பருவத்தில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்துவது இறுதியாண்டு படிக்கின்ற மாணவர்களுக்கு அதிக அளவி லான பொருட்செலவையும், தேவையற்ற மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடிய செயலாக இருந்திடும். எனவே, அனைத்து கட்டண உயர்வு களையும் உடனடியாக ரத்து செய்து, பழைய கட்டணமே வசூலிக்கப்பட துணைவேந்தர் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.