tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

காணாமல் போன பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த செயலி

சென்னை,செப். 20- ஹெலொ சமூக ஊடக செயலியில், காணாமல் போன பெண் ஒருவரை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட ஐந்தாவது மணிநேரத்திலேயே அப்பெண்ணை மற்றொரு ஹெலொ பயனர் அடையாளம் கண்டு தகவல் பகிர்ந்து கொண்டிருக்கிறார். காணாமல் தொலைந்து போன பெண், மீண்டும் தனது குடும்பத்தினருடன் ஒன்றுசேர்ந்ததற்கு, உள்ளூரைச் சேர்ந்த கருணை உள்ளங்கள்  என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன்,  ஹெலொ கேர் மேற்கொண்ட கூட்டு ஒப்பந்தம் மூலமான முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.  ’கருணை உள்ளங்கள்’, இந்தியாவின் மிகப்பெரிய இலாப நோக்கமற்ற, இளைஞர்கள் சேவையாற்றும் தன்னார்வ நிறுவனங்களில் அமைப்புகளில் ஒன்றாகும்.

திருவொற்றியூரில் துணை ஆணையர் ஆய்வு

சென்னை,செப். 20- திருவொற்றியூரில் மழை பாதித்த இடங்களை மாநகராட்சி துணை ஆணையர் பார்வையிட்டார். திருவொற்றியூரில் பெய்த மழையால், கார்கில் நகர், ஜோதி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனிடையே, மாநகராட்சி வடக்கு துணை ஆணையர் திவ்யதர்ஷினி, மழை பாதித்த இடங்களை பார்வையிட்டு, மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். திருவொற்றியூர், கால்வாய்களை அகலபடுத்தவும், சாலையை சீரமைக்க அறிவுறுத்தினார். ஆய்வில் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

சைதாப்பேட்டையில் வழக்கறிஞர் வீட்டில் 150 பவுன் நகை மாயம்

சென்னை, செப்.20- சைதாப்பேட்டையில் வழக்குரைஞர் வீட்டில் 150 பவுன் நகை மற்றும் ரூ.2ஙூ லட்சம் பணம் மாயமானது குறித்து எதிர்வீட்டுக்காரர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள தர்மராஜா கோவில் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. வழக்கறிஞரான  இவர் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது வீட்டில் பீரோவிலிருந்த 150 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றைக் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். நகை-பணம் காணாமல் போனபோது, வழக்கறிஞர் சத்தியமூர்த்தியின் மனைவி ேஜாதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். நகை, பணம் காணாமல் போனது பற்றி அடுக்குமாடிக் குடியிருப்பில் எதிர்வீட்டில் வசிப்பவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த காவல்துறை நகை காணாமல் போனது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றனர். இரண்டு வீட்டுக்கும் பிரச்சனை ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

வழக்கறிஞர் மீது தாக்குதலுக்கு கண்டனம்  

காஞ்சிபுரம்,செப்.20- காஞ்சிபுரத்தில் வழக்கறிஞரைத் தாக்கிய உதவி ஆய்வாளர்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் வழக்கறிஞராக இருப்பவர் சந்திரசேகர். இவர் சின்ன காஞ்சிபுரம் காநிலையத்திற்கு ஒரு வழக்கு சம்பந்தமாக சென்றார். அப்போது அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர்  சிவலிங்கம் வழக்கறிஞர் சந்திரசேகரைத் தரக்குறைவாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களுக்குத் தெரிந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் பார் அசோசியேசன், காஞ்சிபுரம் லாயர்ஸ் அசோசியேசன், காஞ்சிபுரம் அட்வகேட் அசோசியேசன் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய நிகழ்ச்சி 

கவிஞர் தமிழ்ஒளி பிறந்த நாள் கருத்தரங்கம். தலைப்பு: 'சிலப்பதிகாரம் நாடகமா? காவியமா?' நூலை முன்வைத்து "ஆய்வறிஞர் தமிழ்ஒளி" இடம்:நவபாரத் பள்ளி, கோடம்பாக்கம். சென்னை. நேரம்: பகல் 11 மணி, பங்கேற்பு : 'சிகரம்' ச. செந்தில்நாதன்,  செ. அருமைநாதன், முனைவர் பி. இரத்தினசபாபதி.