மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே. சேகர்பாபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.